அந்த இடத்துக்கு 3 பேரை தயார் செய்த பிசிசிஐ... ரகசியத்தை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்!

துலீப் டிராபியில் வாஷிங்டன் சுந்தர், ஹிருத்திக் ஷோக்கின், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
அந்த இடத்துக்கு 3 பேரை தயார் செய்த பிசிசிஐ... ரகசியத்தை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்!

இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வின் 38 வயதை எட்டவுள்ள நிலையில், அடுத்த ஆஃப் ஸ்பின்னருக்கான தேடலை பிசிசிஐ முன்னெடுத்துள்ளதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வினுக்கான மாற்று வீரரை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. 

துலீப் டிராபியில் வாஷிங்டன் சுந்தர், ஹிருத்திக் ஷோக்கின், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த ஆஃப் ஸ்பின்னர் யார் என்பது தொடர்பில் தினேஷ் கார்த்திக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் புல்கிட் நரங், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி தயார் செய்து வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கான ரேசில் முன்னிலையில் இருப்பது வாஷிங்டன் சுந்தர் தான். 

அதனால் முதன்மை வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த முறை ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டாலும், அடுத்த வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைக்கவில்லை.

தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
வாஷிங்டன் சுந்தர் ஜடேஜாவுக்கு இணையான பேட்ஸ்மேன் என்பதால், மற்ற மூன்று பேரையும் விட அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர