இரண்டாவது குழந்தை தொடர்பில் அறிவித்த தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதி
பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளதாக சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு, இன்ஸ்டாகிராம் பதிவொன்றின் மூலம் வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில், தம்பதிகளின் முதற்பிறந்த மகளான துவா படுகோன் சிங் கர்ப்பத்தைக் கண்டறியும் கருவியை (pregnancy test kit) கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அழகிய தருணம் இடம்பெற்றிருந்தது.
இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது.
பதிவுக்கான விளக்கத்தில், தீயக் கண் எமோஜிகள் மட்டும் இடப்பட்டிருந்தாலும், அதில் வெளிப்பட்ட உணர்ச்சி ரசிகர்களை நெகிழச் செய்தது.
அறிவிப்புக்குப் பின்னர், பல திரைப்பட நட்சத்திரங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பொழிந்தனர். நடிகைகள் பரினீதி சோப்ரா மற்றும் சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பலர் தங்களின் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த தம்பதிகள், தங்களின் முதல் குழந்தையான துவா படுகோன் சிங்வை 2024 செப்டம்பர் 8ஆம் தேதி வரவேற்றிருந்தனர். தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், 2018 நவம்பர் 14ஆம் தேதி இத்தாலியின் லேக் கோமோவில் நடைபெற்ற திருமண விழாவில் இணைந்தனர்.
இவர்கள் இருவரும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முதன்முதலில் சந்தித்ததுடன், பின்னர் பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் போன்ற வெற்றிப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் பிரபலமான ஜோடிகளில் இவர்களும் ஒருவர் எனப் பார்க்கப்படுகின்றனர்.
