பயிற்சிக்கு வராத கில், ரிஷப் பந்த்... என்ன நடந்தது? காரணம் இதுதான்... வெளியான தகவல்!

பிட்ச் வடிவமைப்பு காரணமாக இந்தியா, இங்கிலாந்து இடையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 5 நாட்களும் நடைபெற்றது.

பயிற்சிக்கு வராத கில், ரிஷப் பந்த்... என்ன நடந்தது? காரணம் இதுதான்... வெளியான தகவல்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களில் சிலர், பயிற்சிக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பிட்ச் வடிவமைப்பு காரணமாக இந்தியா, இங்கிலாந்து இடையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 5 நாட்களும் நடைபெற்றது.

இங்கிலாந்து பிட்ச்களில் போதுவாகவே, வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால், இம்முறை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், பேட்டர்களும் ரன்களை குவிக்கும் வகையில்தான் பிட்ச் இருந்தது. 

இது, இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற ஆரம்பித்துள்ளதுடன்,  ஆசியாவில் இருக்கும் பந்துவீச்சு பிட்சைபோலதான், முதல் இரண்டு போட்டிக்கான பிட்ச்களும் இருந்தது என்ற விமர்சனம் இருந்தது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்சை மாற்றயமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்சை, முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றியுள்ளனர். 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருப்பதுபோல், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பிட்ச் இல்லை. பந்துவீச்சு பிட்சில், புட்கள் அதிகம் இருக்கிறது. இதனால், துவக்கத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் அதிகமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி, தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்திய அணி அப்படி, தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளவில்லை. 

ஷுப்மன் கில், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் பயிற்சிக்கே வராத நிலையில், வீரர்கள் பயிற்சிக்கு வராதது குறித்து, பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கொடாக் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘மூன்றாவது போட்டிக்கான பந்துவீச்சு பிட்சை பார்த்தோம். பந்துவீச்சு பிட்சில் புட்கள் அதிகம் இருந்தது. ஆனால், அதனை போட்டிக்கு முன்பு வெட்டிவிடுவார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

அதன்பிறகுதான், பிட்ச் எப்படி இருக்கும் என்பதை கணித்து, அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முடியும். பயிற்சிக்கு சில முக்கிய வீரர்கள் வரவில்லை. உண்மைதான். இரண்டாவது டெஸ்டில் அதிக நேரம் விளையாடியவர்களுக்கு, அதிக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால்தான், பயிற்சிக்கு வரவில்லை’’ எனக் கூறினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜஸ்பரீத் பும்ரா, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் பும்ரா பங்கேற்றார்.  கிட்டதட்ட 45 நிமிடங்கள் வரை, தொடர்ச்சியாக அதிவேகமாக பந்துவீசினார். மேலும், பீல்டிங் பயிற்சியையும் மேற்கொண்டார். 

ஜஸ்பரீத் பும்ரா அணிக்குள் வந்திருப்பதால், அவருக்கு மாற்றாக பிரசித் கிருஷ்ணாவை நீக்கதான் அதிக வாய்ப்புள்ளது. மேலும், மூன்றாவது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்யாத கருண் நாயரை நீக்கிவிட்டு, மாற்றாக சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. 

மேலும், வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இடம், தேவையில்லாத இடமாக தெரிவதால், அந்த இடத்தை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் அ்ர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்க அதிக வாய்ப்புள்ளது.