யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன் கைது
14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியை தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.