குறுக்கே வந்த மழை.. ஐபிஎல் இறுதிப் போட்டியின் நிலை என்ன?

இறுதிப் போட்டி நாளில் 62% மழை பெய்யும் என்று கூறப்படும் நிலையில், போட்டி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
குறுக்கே வந்த மழை.. ஐபிஎல் இறுதிப் போட்டியின் நிலை என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளதுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல்முறையாக கோப்பை வெல்லலாம் என கனவுடன் உள்ளது.

இறுதிப் போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. 

இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெற்றிக்கொள்ளாத நிலையில், எந்த அணி கோப்பை வென்று வரலாறு படைக்கப் போகிறது என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி மழையால் நீண்ட நேரம் தாமதமாகவே தொடங்கியது. அதேபோலவே இறுதிப்போட்டியின் போதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அகமதாபாத் நகரத்தில் 62 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதுடன், போட்டி நேரத்தின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியின் போதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இரவு நேரத்தில் குறைவாக இருப்பதாகவே கூறப்பட்ட நிலையிலும்,  டாஸ் போடப்பட்டதற்குப் பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் மழை பெய்தது. 

இறுதிப் போட்டி நாளில் 62% மழை பெய்யும் என்று கூறப்படும் நிலையில், போட்டி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

இதேவேளை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை அதிகப்படியான மழை பெய்யும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், போட்டி தாமதமாக ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர