இஸ்ரேல் தான் அமெரிக்காவின் மிகச் சிறந்த கூட்டாளி – டிரம்ப் புகழாரம்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அமெரிக்கா தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தி, ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் பேசிய டிரம்ப், “இஸ்ரேல் தான் அமெரிக்காவின் மிகச் சிறந்த கூட்டாளி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அவர்கள் துணிச்சலானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் புத்திசாலிகள். நெருக்கடி நேரங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை அடைவதில் இஸ்ரேல் முன்னிலையில் உள்ளது” என்று கூறினார்.
மேலும், மோதல் சூழ்நிலைகளில் இஸ்ரேலின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் வலுவானது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
