பிரித்தானிய விமானங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்... ஸ்தம்பிக்கும் இங்கிலாந்து விமான நிலையங்கள்

Key Points
  • உலகின் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, சாத்தியமான ...
பிரித்தானிய விமானங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்... ஸ்தம்பிக்கும் இங்கிலாந்து விமான நிலையங்கள்

உலகின் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, சாத்தியமான பயண தாமதங்களுக்கு பயணிகள் தயாராக வேண்டியுள்ளது. இந்த மென்பொருள் பாதிப்பு, சூரிய கதிர்வீச்சு காரணமாக முக்கியமான விமான தரவுகள் சிதைவடைவதைத் தடுக்க வேண்டிய அவசியத்தில் ஏற்பட்டுள்ளது.

ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, புதிய மென்பொருள் முந்தைய பதிப்புக்கு மாற்றப்பட வேண்டும். இந்த புதுப்பிப்புக்கு ஒரு விமானத்திற்கு சுமார் 3 முதல் 4 மணி நேரம் ஆகலாம் என விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், விமான நிறுவனங்கள் இரவோடு இரவாகப் பணிகளை முடிக்க முயற்சித்தாலும், சில விமானங்களில் இன்னும் பணிகள் முடியாததால் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், ஈஸிஜெட் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் A320 விமானங்களை பெருமளவில் இயக்குகின்றன. ஈஸிஜெட், ஏற்கனவே பல விமானங்களில் மென்பொருள் புதுப்பிப்பை முடித்துவிட்டதாகவும், முழு நேர பராமரிப்பு முயற்சிகளை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ், தங்கள் மூன்று விமானங்களுக்கு மட்டுமே மென்பொருள் புதுப்பிப்பு தேவை இருந்ததாகவும், அது ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது.

போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர், இந்த அறிவுறுத்தல் பிரித்தானிய விமான சேவைகளுக்கு குறைவான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என உறுதியளித்துள்ளார். இருப்பினும், இவ்வார இறுதியில் பயணத்திட்டம் வைத்துள்ளவர்கள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google