கொழும்பு

கொழும்பில் நடந்த துயரம் : பஸ் மீது மரம் விழுந்ததால் ஐவர் பலி 

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பஸ் மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  

கொழும்பில் நடந்த துயரம் : பஸ் மீது மரம் விழுந்ததால் ஐவர் பலி 

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பஸ் மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  

இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தெனியாயவிலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெகசின் சிறையில் பதற்றம்; 'E' வார்டில் கைதிகள் மோதல், பாதுகாப்பு தீவிரம்

மேலும், உயிரிந்தவர்களுக்கான இறுதிச்சடங்கினை மேற்கொள்ள தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. 

15 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

காயமடைந்த நான்கு பயணிகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு

கொழும்புதமிழ் WhatsApp சேனலில் இணையுங்கள்

உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்த செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது.

எங்கள் நெட்வொர்க்:
ahafm malaioli seithi news21 colombotamil cinema