தன்சல்களை பதிவு செய்யுமாறு விசேட அறிவுறுத்தல்
தன்சல்களை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெசாக் காலத்தில் வழங்கப்படவுள்ள தன்சல்களை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தன்சல்களை பதிவு செய்யுமாறு அந்த சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இதேவேளை, தன்சல் காலப்பகுதியில் தன்சல், உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையில், சுமார் 3ஆயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தச் சங்கம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.