இரண்டு இந்திய வீரர்களை வீட்டுக்கு விரட்டிய பிசிசிஐ.. நடந்தது என்ன?

இனி இந்திய அணிக்கு அவர்கள் இனி உதவியாக இருக்க மாட்டார்கள் என்பதால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு செல்லுமாறு பிசிசிஐ கூறி இருப்பதாக கூறப்படுகின்றது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இரண்டு இந்திய வீரர்களை வீட்டுக்கு விரட்டிய பிசிசிஐ.. நடந்தது என்ன?

இந்திய அணியின் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரையும் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு பிசிசிஐ  அறிவித்து உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

இனி இந்திய அணிக்கு அவர்கள் இனி உதவியாக இருக்க மாட்டார்கள் என்பதால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு செல்லுமாறு பிசிசிஐ கூறி இருப்பதாக கூறப்படுகின்றது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது குரூப் சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவில் விளையாடி வருவதுடன், அமெரிக்காவில் இந்திய அணியின் கடைசி போட்டியில் கனடா அணிக்கு எதிராக நாளை விளையாட உள்ளது.

இதனையடுத்து சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற இருப்பதால் இந்திய அணி அங்கு செல்லவுள்ள நிலையில், நான்கு மாற்று வீரர்களில் சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கானை மட்டும் இந்தியாவுக்கு கிளம்பிச் செல்லுமாறு பிசிசிஐ கூறியுள்ளது. 

ஏனைய இரண்டு மாற்று வீரர்களான ரிங்கு சிங் மற்றும் கலீல் அஹ்மது இந்திய அணியுடன் தொடர்ந்து உள்ளனர்.

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்ற  போதும் ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தன. 

திடீரென ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரை இந்தியாவில் இருந்து அமெரிக்கா அல்லது வெஸ்ட் இண்டீஸ்-க்கு ஒரே நாளில் அனுப்புவது என்பது நடக்காத காரியம் என்பதால்,  இந்திய அணியும் நான்கு மாற்று வீரர்களை அறிவித்தது.

இந்த நிலையில்,துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுக்கு தேவை இல்லை என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளதுடன், மாற்று துவக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். 

எனவே, நான்காவது துவக்க வீரராக இருக்கும் சுப்மன் கில்லை திருப்பி அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதுடன்,  வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள பிட்ச்கள் அனைத்தும் மந்தமானவை என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அங்கு அதிக வேலை இல்லை. 

ஏற்கனவே, 1அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளதுடன்,  ஹர்திக் பாண்டியாவும் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். 

எனவே, மாற்று வீரராக வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது இருக்கும் நிலையில், ஆவேஷ் கானை இந்தியாவுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர