17 பேர் கொண்ட இந்திய அணி இதுதான்... விதிமுறையை மீறிய வீரர் அதிரடி நீக்கம்!

ஐபிஎல் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
17 பேர் கொண்ட இந்திய அணி இதுதான்... விதிமுறையை மீறிய வீரர் அதிரடி நீக்கம்!

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், அதற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

முன்னதாக நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்துவிட்ட நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி, தொடர்ந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இந்த இரண்டு தோல்விகள் காரணமாக, ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதிபெற முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனால், அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

கடைசியாக இங்கிலாந்து மண்ணில்  2007ஆம் ஆண்டில்தான் இந்திய அணி,  ராகுல் டிராவிட் தலைமையில் 0-1 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

இந்தநிலையில், இம்முறை எப்படியாவது இங்கிலாந்தை வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில், தரமான அணியுடன் இந்தியா களமிறங்க உள்ளது. 

சமீபத்தில், பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தத்தில் ஏ+ பிரிவில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், ரோஹித் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பும் பட்சத்தில், கடைசி மூன்று போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. மாற்று ஓபனராக கே.எல்.ராகுல் தயார் நிலையில் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது, அணி மீட்டிங்கில் பேசப்படும் விஷயங்களை, பத்திரிகைகளுக்கு கசியவிட்ட புகாரில் சிக்கிய சர்பரஸ் கானுக்கு, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு பதிலா கருண் நாயர் ஆடுவார் என்றும் பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்திய உத்தேச அணி 

ரோஹித் சர்மா (கேப்டன்)
ஷுப்மன் கில்
 யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
கே.எல்.ராகுல்
விராட் கோலி
ரிஷப் பந்த்
கருண் நாயர்
துரூவ் ஜோரல்
ஷ்ரேயஸ் ஐயர்
நிதிஷ் ரெட்டி
ரவீந்நிர ஜடேஜா
குல்தீப் யாதவ்
வாஷிங்டன் சுந்தர்
ஜஸ்பரீத் பும்ரா
முகமது ஷமி
முகமது சிராஜ்
ஹர்ஷித் ராணா

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.