டிசெம்பரில் பாடசாலை விடுமுறை... பெப்ரவரியில் ஆரம்பம்.. முழுமையான விவரம் இதோ!
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
