ரோகித் சர்மாவால் அச்சம்... தூக்கத்தை இழந்து கஷ்டப்பட்ட கவுதம் கம்பீர்... ஓபன் டாக்!

3ஆம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 4 பவுலர்களை வைத்து செய்த மாற்றங்கள் மற்றும் ஃபீல்ட் மாற்றங்கள் இங்கிலாந்து அணியை விரைவாக வீழ்த்த காரணமாக அமைந்தது. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ரோகித் சர்மாவால் அச்சம்... தூக்கத்தை இழந்து கஷ்டப்பட்ட கவுதம் கம்பீர்... ஓபன் டாக்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இங்கிலாந்து அணி பவுலர்கள் எவ்வளவு முயன்றும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியவில்லை.

நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பான இன்னிங்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தியுள்ளார். 

கடந்த முறை டி20 போட்டியில் இந்திய அணி திணறிய போதும், இதேபோல் சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தினார். 

அதேபோல் 3ஆம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 4 பவுலர்களை வைத்து செய்த மாற்றங்கள் மற்றும் ஃபீல்ட் மாற்றங்கள் இங்கிலாந்து அணியை விரைவாக வீழ்த்த காரணமாக அமைந்தது. 

இதனையடுத்து, ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருவதாக பலரும் பாராட்டி வரும் நிலையில், ஐபிஎல் நாட்களில் ரோகித் சர்மா எப்படி இருந்தார் என்பது குறித்து கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

அதில், ஐபிஎல் நாட்களில் எனக்கு தூக்கமில்லா இரவுகளை அளித்தது ரோகித் சர்மா மட்டும் தான். ஏனென்றால் அவருக்கு தான் பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என்று ஏராளமான திட்டங்களுடன் வர வேண்டி இருக்கும். 

ரோகித் களத்தில் இருந்தால் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதே முதன்மை நோக்கமாக இருக்கும். அவர் வீழ்த்துவதற்கு பல்வேறு திட்டங்களுடன் கூடிய உழைப்பு தேவையாக இருக்கும்.

சுனில் நரைனை வைத்து ரோகித் சர்மாவை கட்டுப்படுத்தலாம் என்று திட்டமிடுவேன். அவர் தொடக்க வீரராக வரும் போது சுனில் நரைனை சமாளித்துவிட்டால், அடுத்த 16 ஓவரில் என்ன நடக்கும் என்பது தெரியும். 

அவரால் ஒரே ஓவரில் 30 ரன்களை கூட விளாச முடியும். ரோகித் சர்மா மட்டும் தான் என் மனதில் அச்சத்தை விதைத்த ஒரே பேட்ஸ்மேன் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர