14,098 ரன்கள் அடித்த இந்திய வீரர்.. கடைசிவரை இந்திய அணியில் இடம் இல்லை... அதிருப்தியில் ஓய்வு!

டெஸ்ட் போட்டிகளில் 14,098 ரன்களை குவித்த இந்திய வீரருக்கு, கடைசிவரை ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு வழங்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
14,098 ரன்கள் அடித்த இந்திய வீரர்.. கடைசிவரை இந்திய அணியில் இடம் இல்லை... அதிருப்தியில் ஓய்வு!

டெஸ்ட் போட்டிகளில் 14,098 ரன்களை குவித்த இந்திய வீரருக்கு, கடைசிவரை ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு வழங்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2016ஆம் ஆண்டில், ஜிம்பாப்வே சென்ற இந்திய அணியில் இடம்பிடித்த பைஷ் பாஷல், ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடி, 55 (61) ரன்களை எடுத்த நிலையில், அந்த ஒரு போட்டிக்கு பிறகு அவருக்கு, இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பவில்லை. 

இந்திய அணிக்காக ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடி, அதில் அரை சதம் அடித்த ஒரேயொரு வீரராக, பைஷ் பாஷல் படைத்த அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.

தொடர்ந்து விதர்பா அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் ஆடி வந்த அவர், விதர்பா அணிக்காக அதிக ரன்களை அடித்தவராக இருந்த போதும், கடந்த மூன்று ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் 56 ரன்களை தான் அடித்தார்.

38 வயதாகிவிட்டதாலும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும், பைஷ் பாஷல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். 

இவரது தலைமையில், விதர்பா அணி 2018, 2019-ல் ரஞ்சிக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

விதர்பா அணிக்காக விளையாடிய பைஷ் பாஷல், 137 முதல்தர போட்டிகளில் 9000 ரன்களும், 113 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3600 ரன்களும் என மொத்தம் 14,098 ரன்களை அடித்துள்ள போதும், இவருக்கு ஒரு டெஸ்டில் கூட இந்திய அணி வாய்ப்பு கொடுக்கவில்லை.

இந்நிலையில், பேசிய பைஷ் பாஷல், ''ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியும், இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.'' என வருத்தத்துடன் பேசினார்.

ஐபிஎல் தொடரில் 2009 முதல் 2011 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 12 போட்டிகளில் 18.30 சராசரியுடன் 183 ரன்களை மட்டும்தான் அடித்தார்.

திறமையான ரஞ்சிக் கோப்பை வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ரஞ்சிக் கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

அத்துடன், ரஞ்சிக் கோப்பையில் ஆடியவர்களுக்கு மட்டுமே, இந்திய டெஸ்ட் அணியில் இடம் என்ற விதிமுறையை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.