அஸ்வினுக்கு மட்டுமல்ல தமிழக வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.. உண்மையை போட்டு உடைத்த முன்னாள் வீரர்!

Key Points
  • ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும், ஆரம்பம் முதலே கடுமையாக போராடி, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்திய டெஸ்ட் அணியில், நிரந்த இடத்தை பிடித்தார்.
அஸ்வினுக்கு மட்டுமல்ல தமிழக வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.. உண்மையை போட்டு உடைத்த முன்னாள் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டில் இருந்து சென்று இடம்பிடித்து, தொடர்ச்சியான வாய்ப்பினை பெறுவது என்பது அவ்வளவு சாதாரணமாக விடயம் கிடையாது.

இந்திய அணியின் கேப்டனாக கிருஷ்ணமச்சாரி ஶ்ரீகாந்த் செயல்பட்ட நிலையில், திடீரென்று அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அத்துடன், லட்சுமிபதி பாலாஜிக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. 

இந்தநிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும், ஆரம்பம் முதலே கடுமையாக போராடி, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்திய டெஸ்ட் அணியில், நிரந்த இடத்தை பிடித்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த உடனே, இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருக்கு, 2ஆவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததுடன், மூன்றாவது டெஸ்டில், நீக்கப்பட்டு ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

டெஸ்டில் 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அஸ்வினுக்கு, ஆஸ்திரேலியாவில் அதிக இடது கை பேட்டர்கள் இருக்கும் நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டமை அதிருப்தியடைய செய்திருக்கும் என்றும், இதனால்தான், அவர் ஓய்வு அறிவித்திருப்பார் என பலரும் கருதுகின்றனர்.

இந்தநிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், இந்திய அணியில் தமிழக வீரர்களுக்கு அநீதி நடைபெறுவதாக, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘அஸ்வின் ஓய்வு அறிவித்ததை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் நல்ல முறையில் நடத்தப்படாத காரணத்தினால்தான், ஓய்வு அறிவித்திருப்பார் என நினைக்கிறேன். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிந்த உடனே, ஓய்வுபெற விரும்பவதாக அஸ்வின் கூறியதாக, ரோஹித் சர்மா கூறியிருந்தார். முதல் டெஸ்டில், அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார். இந்த முடிவு, அஸ்வினுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

மற்ற மாநில வீரர்களைவிட, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் அதிகம் உழைத்தால் மட்டுமே, இந்திய அணியில் இடம் கிடைக்கும். அந்த கடினமான சூழ்நிலையில், 500 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். 

மற்ற மாநில வீரர்கள் தொடர்ந்து சொதப்பினாலும் அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. தமிழக வீரர்களுக்கு திறமை இருந்தும், இந்திய அணியில் அநீதிதான் கிடைக்கிறது. பலமுறை அஸ்வினை ஓரங்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், பீனிக்ஸ் பறவையாக மேலே எழுந்து வந்தார்.’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google