இந்திய அணிக்கு தடை விதிக்க வாய்ப்பு: பாகிஸ்தான் முடிவால் ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இந்திய அணிக்கு தடை விதிக்க வாய்ப்பு: பாகிஸ்தான் முடிவால் ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்!

அடுத்த வருடம் பிப்ரவரி 19ஆம் தேதி, துவங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இதனால், இந்திய அணி பங்கேற்கும் போட்டியை மட்டும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுதல், அல்லது தொடரையே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாமா என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அதிரடியாக அறிவித்துள்ளது. 

இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷித் லதீப், ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். 

மற்ற 6 நாட்டு வீரர்கள் இந்தியா வரும்போது, இந்தியா மட்டும் ஏன், வர முடியாது என்கிறது? ஒருவேளை, மற்ற 6 நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் செல்ல முடியாது எனக் கூறினால், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்தியா வேண்டுமென்றே, வீம்புக்கு பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறது’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு வர முடியாது என்றால், அந்த அணியை தடை செய்ய வேண்டும். அந்த அணிக்கு எதிராக லீக் சுற்றில் ஆடும் அணிகளுக்கு தலா இரண்டு புள்ளிகளை வழங்க வேண்டும். 

இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வராமல் இருக்கும்போது, நாங்கள் மட்டும் ஏன் இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நாங்களும் இந்தியா சென்று ஐசிசி தொடரில் பங்கேற்க மாட்டோம். இதனால், இனி இந்தியாவிலும் ஐசிசி தொடர்களை நடத்த கூடாது’’ என அதிரடியாக பேசியுள்ளார்.

இந்தியாவில் அடுத்தாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டில், ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. 

தற்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரஷித் லத்திப் சொன்னதுபோல் அழுத்தம் கொடுத்தால், இந்த இரண்டு தொடர்களையும் இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்படும்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர