ஷதாப் கான் ஹாட்ரிக் விக்கெட்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது தொடரில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ஷதாப் கான் ஹாட்ரிக் விக்கெட்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் 

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது தொடரில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஷெவான் டேனியல் தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஷெவன் டேனியல் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த முகமது வசீம் மற்றும் சமரவிக்ரமா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்ந்தது. 

இவர்களது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது முதல் 6 ஓவர்களிலேயே 78 ரன்களைக் குவித்தது. 

இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட முகமது வசீம் 32 ரன்களிலும், சமரவிக்ரமா 48 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கிளென் பிலீப்ஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் அதன்பின் களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா 38 ரன்களையும், ஷதாப் கான் 20 ரன்களையும், கருணரத்ன 25 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைக் குவித்தது. 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சந்திமல் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

லங்கா பிரீமியர் லீக் தொடரை அபார வெற்றியுடன் தொடங்கியது கண்டி அணி

இதில் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய தினேஷ் சந்திமாலும் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்க மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை வீசிய ஷதாப் கான், அந்த ஓவரில் வநிந்து ஹசரங்க, அகா சல்மான் மற்றும் பவன் ரத்னாயக ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதனால் கண்டி அணி 146 ரன்களிலேயே 8 விக்கெட்ட்களை இழந்து தடுமாறியது.  இதனையடுத்து அணியின் நம்பிக்கையாக இருந்த தசுன் ஷனக 5 ரன்களுக்கும், கசுன் ரஜித ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, கண்டி ஃபால்கன்ஸ் அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

கொழும்பு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷதாப் கான் மற்றும் துனித் வெல்லலாகே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.   

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர