பாகிஸ்தான் வீரரால் தலைவலி.. காவ்யா மாறனுக்கு உதவ முன்வந்த லலித் மோடி

பாகிஸ்தான் வீரரால் தலைவலி.. காவ்யா மாறனுக்கு உதவ முன்வந்த லலித் மோடி

இங்கிலாந்தில் நடைபெற உள்ள The Hundred 2026 தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்குச் சொந்தமான Sunrisers Leeds அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் Abrar Ahmed ஐ ஏலத்தில் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 2.34 கோடி ரூபாய் மதிப்பில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முடிவு சமூக வலைத்தளங்களிலும், கிரிக்கெட் வட்டாரங்களிலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் Lalit Modi, Kavya Maran க்கு உதவ முன்வந்துள்ளார்.

தனது சமூக வலைதள பதிவில், ரசிகர்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் சூழலில் இத்தகைய முதலீடு சர்ச்சையை அதிகரிக்கும் என்றும், இத்தகைய நெருக்கடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தமக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இந்திய ஜாம்பவான் Sunil Gavaskar இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு பாகிஸ்தான் வீரருக்கு வழங்கப்படும் பணம் மறைமுகமாக இந்தியர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 2008 Mumbai attacks பிறகு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படாததையும் அவர் நினைவூட்டினார்.

ஐபிஎல் தொடர்புடைய ஒரு அணி வெளிநாட்டு லீக்கில் பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

அதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களை நாட்டின் அடிப்படையில் பாகுபாடு செய்யக்கூடாது என்று முன்பே அறிவுறுத்தியுள்ளது.

Abrar Ahmed 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றவர். அவரது சுழற்பந்து வீச்சு திறமை காரணமாகவே அதிக விலையில் அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் Sunrisers Hyderabad மற்றும் Sunrisers Eastern Cape அணிகளுக்குப் பிறகு, Sunrisers Leeds அணியும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.