திடீரென்று வீட்டுக்கு சென்ற கோலி... 3ஆவது டி20யில் விளையாடுவாரா? விவரம் இதோ!

டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்குப் பிறகு, கோலி டி20 போட்டியில் விளையாட இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
திடீரென்று வீட்டுக்கு சென்ற கோலி... 3ஆவது டி20யில் விளையாடுவாரா? விவரம் இதோ!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், அதிரடியாக விளையாடிய விராட் கோலி, மூன்றாவது போட்டி துவங்குவதற்கு முன், அவசரமாக வீடு திரும்பியுள்ளார். 

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியின்போது, சொந்த காரணங்களுக்கான வீடு திரும்பிய விராட் கோலி, இரண்டாவது போட்டியின்போது இந்திய அணிக்கு திரும்பினார். 

டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்குப் பிறகு, கோலி டி20 போட்டியில் விளையாட இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, முதல் பந்திலேயே கிரீஸை விட்டு இறங்கு வந்து, கவர் டிரைவ் ஷாட்டில் பவுண்டரி அடித்து அசத்தினார். 

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா இடம் மட்டுமே உறுதியாகி இருக்கும் நிலையில், கோலியின் இடம் இன்னமும் உறுதியாகவில்லை. 

அதற்கு முக்கிய காரணம், அவரது ஸ்ட்ரைக் ரேட் தான். இந்நிலையில்தான், இரண்டாவது போட்டியில் விராட் கோலி 181 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து அசத்தினார்.

டி20 வரலாற்றில் பாரிய சாதனை.. சர்வதேச ரீதியில் விராட் கோலியின் மாபெரும் ரெக்கார்டு

முதல் போட்டியின்போது விராட் கோலி வீடு திரும்பியிருந்த நிலையில், தற்போது 3ஆவது டி20 போட்டிக்கு முன்பும் கோலி வீடு திரும்பினார். இதனால், மூன்றாவது போட்டியிலும் கோலி விளையாடுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. 

இந்நிலையில், கோலி ஏன் வீடு திரும்பினார், அவர் எப்போது மீண்டும் அணிகு திரும்புவார், மூன்றாவது டி20 போட்டியில் கோலி விளையாடுவாரா, மாட்டாரா என்பது குறித்து பிசிசிஐ தெளிவு படுத்தியுள்ளது.

வரும் ஜனவரி 21ஆம் தேதி, ஆயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்காக, கோலிக்கு அழைப்பிதழ் கொடுக்க விழா குழுவினர், கோலியின் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். 

அந்த அழைப்பிதழை பெறுவதற்குதான் கோலி வீடு திரும்பியிருக்கிறார். வீட்டில் கோலி ஒரு மணி நேரம் மட்டுமே இருந்திருக்கிறார். அதன்பிறகு, கோலி பெங்களூர் திரும்பிவிட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர