நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி - சூர்யகுமார் யாதவ் எடுத்த அதிரடி தீர்மானம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது.
இதனையடுத்து, முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளதாக இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்தார்.
17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணி பந்து வீச, பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது.
