டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர் நீக்கம்... மாற்று வீரர் இவர்தான்... அஜித் அகார்கர் திடீர் முடிவு?

இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையில் பயிற்சி டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில், இதன் முடிவில்தான், இந்திய பேட்டிங் வரிசை தீர்மானிக்கப்பட உள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர் நீக்கம்... மாற்று வீரர் இவர்தான்... அஜித் அகார்கர் திடீர் முடிவு?

இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையில் பயிற்சி டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில், இதன் முடிவில்தான், இந்திய பேட்டிங் வரிசை தீர்மானிக்கப்பட உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பயிற்சி டெஸ்டில், சர்பரஸ் கான் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு அசத்தியதுடன், பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருந்தபோதும் பும்ரா போன்றவர்களுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் செய்தார். 

குறிப்பாக, 76 பந்துகளில் 15 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் உட்பட 101 ரன்களை குவித்தார். இவர் சதம் அடித்த உடனே, ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இப்போட்டியில் மட்டுமல்ல, அண்மையில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கூட 92 ரன்களை குவித்து அசத்தினார். இப்படி, சர்பரஸ் கான் முரட்டு பார்மில் இருப்பதாலும், அணியில் இளம் பேட்டிங் வரிசை இருப்பதாலும், சர்பரஸ் கானை அணிக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது.

பயிற்சி டெஸ்டில், சாய் சுதர்ஷன் 60 பந்துகளை எதிர்கொண்டு, அதில் 7 பவுண்டரிகள் உட்பட 38 ரன்களைதான் அடித்தார். பும்ரா ஓவருக்கு 5 ரன்களுக்கு மேலும், முகமது சிராஜ் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேலும் விட்டுக்கொடுத்து சொதப்பியபோதும், சாய் சுதர்ஷன் சிறப்பாக செயல்படவில்லை. 

பந்துகளை எதிர்கொள்வதில் சிறு தடுமாற்றம் இருந்ததுபோல் தெரிந்தது. இதனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், சாய் சுதர்ஷனுக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்க வாய்ப்பு குறைவு எனக் கருதப்படுகிறது.

மேலும், டாப் ஆர்டர் இடங்களில் கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், கருண் நாயர் போன்றவர்கள் இருப்பதால், சாய் சுதர்ஷனை மிடில் வரிசையில்தான் ஆட வைக்க முடியும். 

சர்பரஸ் கான் மிடிங் வரிசையில் தேர்ச்சிபெற்றவராக இருக்கிறார். இதனால், கடைசி நேரத்தில், சுதர்ஷனை நீக்கிவிட்டு, சர்பரஸ் கானை சேர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் அல்லது சர்பரஸ் கான், சுதர்ஷன் இருவரையும் அணியில் வைத்து, சர்பரஸ் கானுக்கு முன்னுரிமை கொடுக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய டெஸ்ட் அணிக்காக, மொத்தம் 6 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் சர்பரஸ் கான், அதில், 37.10 சராசரியில் 371 ரன்களை அடித்துள்ளார். பெங்களூரில், நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்களை அடித்ததுதான் இவரது பெஸ்ட்டாக இருக்கிறது. 

இப்போட்டிக்கு பிறகு, அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், நியூசிலாந்துக்கு எதிராக பெரிய ரன்களை அடிக்கவில்லை. இதனால், அப்படியே ஓரங்கட்டிவிட்டனர். இன்னமும், ஒருமுறை கூட வெளிநாட்டில் விளையாடவில்லை.

சர்பரஸ் கானின் பிட்னஸ் சரியில்லை என்ற விமர்சனம் இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வந்தபோது, சர்பரஸ் கான் கடும் உடற்பயிற்சி செய்து, 10 கிலோ எடையை குறைத்து, தற்போது நல்ல பிட்னஸில் இருக்கிறார். 

மேலும், அவரது ஷாட் தேர்வுகளும் சிறப்பாக இருக்கிறது. அப்படியிருந்தும், அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சேர்க்காதது, கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போது, இந்தியா மற்றும் இந்தியா ஏ இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் தேசியி கிரிக்கெட் அகடமியில் தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். 
இவர்கள்தான், எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர