உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு
- 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்ன...
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதவான், கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படக் கூடிய கைது நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


