நம்பிக்கை இல்லைனா எதுக்கு அணியில் சேர்தீங்க... ரோஹித்தை விளாசிய கம்பீர்!

கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடிய நிலையில், ஜடேஜாவும் நிதான ஆட்டம் ஆடி 22 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
நம்பிக்கை இல்லைனா எதுக்கு அணியில் சேர்தீங்க... ரோஹித்தை விளாசிய கம்பீர்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கிண்ண இறுதிப் போட்டியில்முதலில் பேட்டிங் செய்த  இந்தியா 4 விக்கெட்களை இழந்த நிலையில், கே எல் ராகுல் களத்தில் இருந்த போது ஆறாம் வரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு பதில், ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார்.

கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடிய நிலையில், ஜடேஜாவும் நிதான ஆட்டம் ஆடி 22 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

அதை அடுத்தே அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கியதுடன்,  அதிரடி ஆட்டத்தை தொடங்கும் முன்பே கே எல் ராகுல் ஆட்டமிழந்தார்.

அதன் பின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்ததால் சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டம் ஆடி அவரும் 28 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

கே எல் ராகுல் அல்லது கோலி களத்தில் இருந்த போதே சூர்யகுமார் யாதவை இறக்கி விட்டு இருந்தால் ஒரு பக்கம் அவர்கள் நிதான ஆட்டம் ஆட, மறுபுறம் சூர்யகுமார் யாதவ் தன் இயல்பான ஆட்டத்தை ஆடி இருப்பார். 

ஆனால், சூர்யகுமாரை நம்பாமல் ஜடேஜாவை இறக்கியது ஏன், சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பார் என நம்பிக்கை இல்லை என்றால் அவரை அணியில் தேர்வு செய்ததற்கு பதில் வேறு யாரையாவது அணியில் தேர்வு செய்து இருக்கலாமே என கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கம்பீர் கேள்வி எழுப்பி உள்ளார்.

"சூர்யகுமார் யாதவுக்கு முன் ஜடேஜாவை ஏன் அனுப்பினார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது சரியான முடிவு என தோன்றவில்லை. கே எல் ராகுல், கோலியுடன் இணைந்து நிதான ஆட்டம் ஆடிய நிலையில், அடுத்து சூர்யகுமார் யாதவை அவரது இயல்பான ஆட்டத்தை அடுமாறு கூறி இருக்கலாம். அடுத்து பேட்ஸ்மேன் ஆன ஜடேஜா பேட்டிங் வர தயாராக இருந்து இருப்பார். ஆறாம் வரிசையில் சூர்யகுமார் யாதவை ஆட வைப்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கிறது என்றால் அவரை அணியில் தேர்வு செய்ததற்கு பதில் வேறு யாரையாவது அணியில் தேர்வு செய்து இருக்கலாமே" என்றும் கேள்வி எழுப்பினார் கவுதம் கம்பீர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர