அலைபேசிக்கு அடிமையான மகனுக்கு எதிராக தாய் முறைப்பாடு
13 வயதுடைய மகனுக்கு எதிராக தாயார் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் காலி - பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இணையம் ஊடாக கையடக்கத் தொலைபேசியில் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது மகனை மீட்டு தருமாறு தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
தாயாரின் முறைப்பாட்டிற்கமைய, வெள்ளிக்கிழமை மாலை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் மகன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதையும் படியுங்கள்:
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு
மாவட்ட நீதிமன்றத்தினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை பிள்ளையின் பாதுகாப்பை தந்தையிடமே வழங்குமாறு பலப்பிட்டிய பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
