பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிப்ரவரியில் இந்தியா வருகிறார்
இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அடுத்த மாதம் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை தரவுள்ளார். டெல்லியில் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் "செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு" (AI Action Summit) ஒன்றில் கலந்துகொள்ள அவர் இந்தியா வருகிறார்.
இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த முயற்சி, இந்தியா–பிரான்ஸ் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஜீன்-நோயல் பரோட்டை சந்தித்தபோது, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை இந்தியா ஆவலுடன் வரவேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்த வருகை, இரு நாடுகளுக்கும் இடையேயான தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளிலான கூட்டுறவை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
