சென்னை அணியில் ருதுராஜுக்கு இடமில்லை.. மாற்று கேப்டன் இவர்தான்? அணி மீட்டிங்கில் தோனி அதிரடி!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், பந்துவீச்சாளர்கள் சொதப்பிவிடுகிறார்கள்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், பந்துவீச்சாளர்கள் சொதப்பிவிடுகிறார்கள்.
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால், துடுப்பாட்ட வீரர்கள் சொதப்புகிறார்கள். ஆரம்ப வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், மிடில் வரிசை சொதப்புகிறது. எல்லாம் சரியாக இருக்கும் நாளில் பீல்டர்கள் சொதப்புகிறார்கள்
இப்படியான நிலையில், புது அதிரடி முடிவுகளை எடுத்து, அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மகேந்திரசிங் தோனி இருக்கிறார்.
இந்த நிலையில், சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றம் செய்திருப்பதாகவும், இனி இதுதான் நிரந்தமாக இருக்கும் எனவும் அணி மீட்டிங்கில் தோனி பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஐபிஎல் 19ஆவது சீசனிலும் மகேந்திரசிங் தோனிதான் கேப்டனாக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.
அடுத்த சீசனில் அணியை பலமிக்கதாக கட்டமைத்தப் பிறகுதான் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளாராம். பேட்டிங் வரிசையில் அதிக கவனம் செலுத்தி, இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க போகிறாராம்.
சிஎஸ்கேவில் ஓபனர்களாக ஷேக் ரஷித் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் இருக்கிறார்கள். இருவரும் சிறந்தவர்களாக இருப்பதால், இனி சிஎஸ்கேவின் ஓபனர்களாக இவர்கள் இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டிவோல்ட் பிரேவிஸ், ஷிவம் துபே என முதல் 5 பேட்டிங் இடங்கள் உறுதியாகிவிட்டதாகவும், ருதுராஜ் கெய்க்வாட், மதீச பதிரனா, அஸ்வின் போன்றவர்களை அணியில் இருந்து நீக்கினால், அதன்மூலம் கிடைக்கும் பெரிய தொகையை வைத்து, சிறந்த பேட்டர்கள், பந்துவீச்சாளர்களை வாங்க முடிவு செய்துள்ளார்களாம்.
குறிப்பாக, ட்ரேடிங் மூலம் சாம்சன் கிடைத்தால், அவரையும் அணிக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவேளை, சாம்சன் ஏலத்திற்கு வந்தால், அவரை பெரிய தொகை கொடுத்து வாங்க தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
இதனால், தோனிக்கு அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சன்தான் கேப்டனாக இருப்பார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இதேவேளை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், ஜாஸ் பட்லரை வெளியேற்றியது, சாம்சனுக்கு பிடிக்கவில்லை என்றும், அப்போது இருந்தே, சாம்சனுக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையில் மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், அங்கு யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் வைபப் சூர்யவன்ஷி ஆகியோர் ஓபனர்களாக இருக்கிறார்கள். இதனால், சாம்சன் வெளியேறதான் அதிக வாய்ப்புள்ளது.