இலங்கையில் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இலங்கையில் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.

நுவரெலியா- கம்பளை வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 21 பயணிகள் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

பேருந்தில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இலங்கையில் இன்று நடைபெற்றுள்ள இந்த விபத்துதான் அண்மைய ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.