கம்பீரின் பிடிவாதத்தால் ஏற்பட்ட நிலை... பொறுமை இழந்த பிசிசிஐ...  இருவருக்கு ஆப்பு... அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுள்ளதை அடுத்து பிசிசிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கம்பீரின் பிடிவாதத்தால் ஏற்பட்ட நிலை... பொறுமை இழந்த பிசிசிஐ...  இருவருக்கு ஆப்பு... அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுள்ளதை அடுத்து பிசிசிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பதவியேற்ற பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதுடன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களை இழந்த நிலையில், இங்கிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பையும் தவற விட்டுள்ளது. 

இதன் காரணமாக, பிசிசிஐ பொறுமை இழந்துள்ளதுடன், டெலிகிராப் பத்திரிகை தகவலின்படி, இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்சேட் ஆகியோரை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இங்கிலாந்து தொடர் முடிந்ததும் இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகின்றது. செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை 2025 வரை கால அவகாசம் குறைவாக இருப்பதால், இந்த மாற்றங்கள் தாமதமாகலாம். 

இருப்பினும், அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடருக்கு முன் இந்த மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கெனவே, பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை போல மோர்கல் மற்றும் ரியான் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்திய அணியில் வீரர்கள் அளவில் பல மாற்றங்கள்  செய்யப்படுவதால், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் மாற்றம் எதையும் பிசிசிஐ விரும்பவில்லை. எனவே, கம்பீர் தனது பதவியில் தொடர்வார்.

பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், புதுப் பந்தில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் மட்டுமே பந்துவீசிய அன்ஷுல் கம்போஜை விளையாட வைத்த முடிவு, அவரது பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை அணியில் சேர்க்காததும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன்,  இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர்  குல்தீப் யாதவ் போன்ற ஒரு சிறந்த வீரரை வெளியே வைத்திருப்பது இந்திய அணிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மோர்னே மோர்கல் மற்றும் டென் டோஸ்சேட் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு கம்பீரால் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே பிசிசிஐ உயர் அதிகாரிகள் அவர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

ஆனால், கம்பீரின் பிடிவாதத்தால் அவர்கள் இந்திய அணியில் பயிற்சியாளர்கள் குழுவில் இடம் பெற்றனர். தற்போது இந்திய அணியின் தொடர்ச்சியான மோசமான டெஸ்ட் முடிவுகளால், அவர்களை நீக்க பிசிசிஐ தயாராகி வருகின்றது.