ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? வைபவ் சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பில் அதிர்ச்சி!
- விளையாட்டு உலகில் அசுர வளர்ச்சி கண்டுவரும் வைபவ், மிக இளம் வயதிலேயே கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
- இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 7 கோடி முதல் 10 கோடி வரை இருக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மீதுதான் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன், பும்ரா மற்றும் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டு வருகிறார். தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ராஜஸ்தான் அணியை பிளேஆப் சுற்றுவரை அழைத்து வந்துள்ளார்.
65 சிக்ஸர்கள் விளாசி சாதனை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை யாரும் மறக்க முடியாது. பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட அனைத்து பவுலர்களையும் கதற விட்ட அவர், வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். இந்தச் சீசனில், வைபவ் 15 இன்னிங்ஸ்களில் 45.33 சராசரி மற்றும் 242.85 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 680 ரன்கள் அடித்துள்ளார், இது அவருக்கு ஆரஞ்ச் கேப்பையும் பெற்றுத் தந்துள்ளது. 280 பந்துகளில் 55 பவுண்டரிகள் மற்றும் 65 சிக்ஸர்களை விளாசி, கிறிஸ் கெய்லின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இளம் வயது கோடீஸ்வரர்
விளையாட்டு உலகில் அசுர வளர்ச்சி கண்டுவரும் வைபவ், மிக இளம் வயதிலேயே கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். 2026-ம் ஆண்டு நிலவரப்படி, இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை இருக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ. 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, மேலும் இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதற்காக ரூ. 1.65 கோடி மேட்ச் ஃபீஸாகவும் பெற்றுள்ளார்.
சொகுசு வீடுகள் முதல் அதிநவீன கார்கள் வரை
இன்றைய நவீன கிரிக்கெட் வீரர்கள் ஆடம்பர பங்களாக்களில் வாழ்வதையே விரும்பும் நிலையில், வைபவ் இன்றும் தனது வேர்களை மறக்கவில்லை. பீகாரில் உள்ள தனது எளிமையான பூர்விக வீட்டில் (ரூ. 40-60 லட்சம் மதிப்பில்) அவரது குடும்பம் வசித்து வருகிறது. அதே நேரத்தில், தனது தொழில்முறை கிரிக்கெட் பயிற்சிகளுக்காக மும்பையில் ரூ. 2.5 கோடி முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான அதிநவீன சொகுசு பிளாட் ஒன்றை வைபவ் வாங்கியுள்ளார்.
லைசென்ஸ் இல்லை; ஆனால் வரிசை கட்டும் சொகுசு கார்கள்
வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் 18 வயது நிரம்பவில்லை. எனவே, சட்டப்படி அவரிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லை. இருப்பினும், அவரது கராஜில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் டாட்டா கர்வ் ஈவி (Tata Curvv EV) போன்ற பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. டாட்டா நிறுவனம் 'சூப்பர் ஸ்டிரைக்கர்' விருதின் ஒரு பகுதியாக இந்த காரைப் பரிசாக வழங்கியது, அதேநேரம் ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர் ரஞ்சித் பார்தகூரும் இவருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.
அதிரடி விளம்பர ஒப்பந்தங்கள்
வைபவின் மிகப் பெரிய வருமான ஆதாரமாக விளம்பர ஒப்பந்தங்கள் உருவாகியுள்ளன. காம்ப்ளான் (Complan), கூகுள் பே (Google Pay), ரெட்புல் (Red Bull) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இவரை தங்களின் பிராண்ட் அம்பாஸிடராக நியமித்துள்ளன. காம்ப்ளான் ஒப்பந்தம் மட்டுமே ரூ. 75 முதல் 80 லட்சம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், அன்றைய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், U19 உலகக் கோப்பை வெற்றிக்காக ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசாகவும் வழங்கினார்.
இளம் வயதிலேயே கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷியின் பயணமும், சொத்து மதிப்பும் எதிர்காலத்தில் மேலும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து, விரேந்தர் சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னணி வீரர்கள் கூட, தற்போது நடைபெற்றுவரும் ஏலத்தில் இவருக்காக ரூ. 30 கோடி வரை செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
