நான்சி குத்ரி கடத்தல் வழக்கு: கண்டெடுக்கப்பட்ட DNA முடிவுகளால் புலனாய்வில் தேக்கம்

கடந்த ஜனவரி 31 முதல் காணாமல் போன நான்சி குத்ரி, சுயமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அவர் வலுக்கட்டாயமாகவே கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர். 

நான்சி குத்ரி கடத்தல் வழக்கு: கண்டெடுக்கப்பட்ட DNA முடிவுகளால் புலனாய்வில் தேக்கம்

அமெரிக்காவின் பிரபல NBC 'டுடே' (Today) நிகழ்ச்சித் தொகுப்பாளர் சவன்னா குத்ரியின் தாயார், 84 வயதான நான்சி குத்ரி கடத்தப்பட்ட வழக்கில் துப்பறியும் குழுவினருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

அரிசோனாவின் டூசன் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கையுறை ஒன்றில் இருந்த DNA மாதிரிகள், தேசிய தரவுத்தளத்தில் உள்ள எதனுடனும் ஒத்துப்போகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 31 முதல் காணாமல் போன நான்சி குத்ரி, சுயமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அவர் வலுக்கட்டாயமாகவே கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர். 

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய முகமூடி அணிந்த நபர் அணிந்திருந்த கையுறையுடன் இது ஒத்துப்போவதால், அவர் மீதே சந்தேகம் வலுக்கிறது. இந்த வழக்கை எப்.பி.ஐ (FBI) கடத்தல் மற்றும் மீட்புப் பணயத்தொகை கோரும் வழக்காக விசாரித்து வரும் நிலையில், நான்சி உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.