ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இந்நிலையில், அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அதற்குமுன், யார் யாரை தக்கவைப்பது என்பதிலும், மும்பைக்கு பெரும் பிரச்சினை உள்ளது.

ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது, ரோஹித் சர்மாவுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறாராம்.

மேலும், கேப்டன் பதவி இல்லையென்றாலும் 10 கோடிக்கு கீழ் தன்னை தக்கவைக்க நினைத்தால், அணியைவிட்டு அனுப்பிவிடுங்கள் என ரோஹித் சர்மா தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

10 கோடிக்கு மேல் தக்கவைக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டுதான், மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் முடிவில், ரோஹித் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாக கருதப்படுகிறது.

ரோஹித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கியதும், ரோஹித்திற்கு 38 வயதாகிவிடும். அந்த சமயத்தில், ரோஹித் பார்மில் இருந்தால்தான், அவருக்கு மசுவு. 

வயதாக வயதாக, பேட்டிங் பார்ம் குறைந்துவிடும் என்பதால், மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்கும் 4 வீரர்களில், ரோஹித்தை கடைசியாக மட்டுமே தக்கவைக்க முடியும் என மும்பை இந்தியன்ஸ் கருதுவதாக தெரிகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு, கிட்டதட்ட ஒரேமாதிரியான ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால், 4ஆவதாக தக்கவைக்கும் ரோஹித் சர்மாவுக்கு, அதிகபட்சமாக 6 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், திட்டவட்டமாக இருக்கிறதாம். 

இதனை ரோஹித் சர்மா ஏற்கவில்லை என்றால், அவரை ட்ரேடிங் மூலம் வேறு அணிக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளார்களாம். ஆர்சிபி, லக்னோ, பஞ்சாப் கிங்ஸ் அணிகள், இவரை ட்ரேடிங்கில் வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர