அறையில் தனியா அமர்ந்து அழுத அஸ்வின்... ரோகித் செஞ்ச மறக்க முடியாத காரியம்!

Key Points
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500...
அறையில் தனியா அமர்ந்து அழுத அஸ்வின்... ரோகித் செஞ்ச மறக்க முடியாத காரியம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி 

ஆனால்  அவரால் நீண்ட நேரம் அந்த மகிழ்ச்சியைகொண்டாட முடியவில்லை. அவரது தாயின் உடல்நிலை காரணமாக, உடனே சென்னைக்கு வந்து தாயை சந்தித்து விட்டு, மீண்டும் அணிக்கு திரும்பி இருந்தார்.

இது குறித்து தற்போது பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய பிறகு, ஹோட்டல் வந்தும் கூட என் மனைவியிடம் இருந்து போன் வரவில்லை. இரவு ஏழு மணி அளவில் மனைவிக்கு போன் செய்தேன். அப்பொழுது அவரது குரல் உடைந்து அழ ஆரம்பித்தார். 

என்னுடைய அம்மா தலைவலியாக இருக்கிறது என்று மயங்கி சரிந்து விட்டார் என்று கூறினார். என்னை வீட்டிற்கு வர சொன்னதால், அதற்கு எப்படி பதில் சொல்வது என்று எதுவுமே தெரியவில்லை. 

நான் தனியாக என்னுடைய ஹோட்டல் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். என்னிடமிருந்து எந்த பதிலும் வராததால், என் மனைவி ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு தகவல் சொல்லி உள்ளார்.

அவர்களுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நான் வீட்டிற்கு போனால் பத்து பேர் மட்டுமே இருப்பார்கள். ஏற்கனவே தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கிறது. இந்த நிலைமையில் நான் சென்றால் ஒரு பந்துவீச்சாளர் குறைவாகிவிடும் என்று யோசித்தேன்.

அதே நேரத்தில் எப்படியாவது என் அம்மாவை சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் சென்னை செல்வதற்கு ராஜ்கோட்டில் இருந்து விமானங்களை தேடிக் கொண்டிருந்தேன். மாலையில் ராஜ்கோட்டில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இல்லை.

ராகுல் மற்றும் ரோகித்தும் என்னுடைய அறைக்கு வந்தார்கள். நீ இப்போதே கிளம்பு, வாடகைக்கு விமானத்தை பிடித்து தருகின்றேன் என்று ரோஹித் கூறினார்.

புஜாரா நிறைய பேரிடம் பேசி எனக்கு வாடகைக்கு விமானத்தை பிடித்து கொடுத்தார். அந்த விமானத்தில் இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பினேன்.

ரோஹித் சர்மா என்னுடன் அணியின் பிசியோதெரபிசியில் ஒருவரான கமலேஷை உடன் அனுப்பி வைத்தார். ரோகித் சர்மா செய்ததைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். 

நான் கேப்டனாக இருந்தாலும் உதவி செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பேன். ஆனால் இப்படி உடன் ஒருவரை அனுப்பி வைக்கும் அளவுக்கு அவர் எப்படி யோசித்தார் என்று தெரியவில்லை.

ரோகித் சர்மாவை நான் எப்பொழுதும் ஒரு சிறந்த தலைவராக பார்க்கிறேன். கடவுள் யாருக்கும் எதையும் எளிதில் கொடுக்க மாட்டார். இன்னும் பெரிதாக ரோஹித்  சாதிப்பார். நான் அவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google