இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர்? உண்மையை உடைத்த கவாஸ்கர்!

ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.


இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர்? உண்மையை உடைத்த கவாஸ்கர்!

ஐபிஎல் தொடரில் 2020ஆம் ஆண்டில், டெல்லி கேபிடல்ஸ் அணியை, முதல்முறையாக பைனலுக்கு அழைத்துச் சென்ற ஷ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் 2024 தொடரில் கேகேஆர் அணிக்கு கோப்பையையும் வென்றுகொடுத்தார்.

தொடர்ந்து, 18ஆவது சீசனில், பஞ்சாப் கிங்ஸ் அணியை பைனல் வரை வழிநடத்தியுள்ளார். அதாவது, 11 வருடங்களுக்கு பிறகு, பஞ்சாப்பை பைனல் வரை அழைத்துச் சென்ற கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் இருக்கிறார். 

இந்த நிலையில், ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

இந்திய அணிக்கு ஷ்ரேயஸ் ஐயரால் சிறந்த கேப்டனாக இருக்க முடியுமா, இல்லையா என்ற விவாதம் தற்போது தேவையற்றது என்று கூறிய அவர், தற்போது, ஷுப்மன் கில்லை மட்டுமே பார்க்க வேண்டும். அவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.

ஷுப்மன் கில் கேப்டனாக இருக்கும்போது, ஷ்ரேயஸ் ஐயருக்கு கேப்டன் பதவியை கொடுக்கலாமா என்று பேசினால், அது ஷுப்மன் கில்லின் கேப்டன்ஸியை பாதிப்பதுடன், தேவையில்லாத அழுத்தங்களை ஷுப்மன் கில்லுக்கு கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாம் ஷுப்மன் கில்லுக்கு தேவையில்லாத அழுத்தங்களை கொடுக்க கூடாது. ஷ்ரேயஸ் ஐயர் தற்போது இந்திய அணியிலேயே இல்லை. அப்படியிருக்கும் போது, தற்போது ஏன் ஷ்ரேயஸ் ஐயர் குறித்து பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், கடந்தமுறை இங்கிலாந்து சென்றபோது ஷார்ட் பால்களுக்கு எதிராக தடுமாறிய ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

ஐபிஎல் 18ஆவது சீசனில் ஷ்ரேயஸ் ஐயர் ஷார்ட் பால்களை சிறப்பாக எதிர்கொண்டதுடன், நல்ல பார்மில்தான் இருந்தாலும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

அத்துடன், புதிதாக சாய் சுதர்ஷனை சேர்த்துள்ளதுடன், 7 வருடங்களுக்கு பிறகு கருண் நாயருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
சீனியர் வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த நிலையில்,  முகமது ஷமியின் பந்துவீச்சு, பழைய மாதிரி அபாரமாக இல்லை என்பதால், ஷமியை அணியைவிட்டு நீக்கியுள்ளனர்.

கடைசியாக 2007ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 

கடைசியாக இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றதுடன், தொடரை சமன் செய்தது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google