யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து; 20 பேர் காயம்
யாத்திரை சென்ற பேருந்து ஒன்று வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலதெனியவின் யடிஹலகல பகுதியில் இன்று (12) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
