இந்திய அணியின் அதிரடி ஆட்டம்: ஆடிப் போன வங்கதேசம்.. மாஸ் காட்டும் ரோகித் படை!

இந்திய அணி 6 ஓவரில் 51 ரன்களை குவித்து, வங்கதேச அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இந்திய அணியின் அதிரடி ஆட்டம்: ஆடிப் போன வங்கதேசம்.. மாஸ் காட்டும் ரோகித் படை!

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த திட்டமிடல் மூலம் வங்கதேசத்தை வெளுத்து வாங்கியது. இந்திய அணி 6 ஓவரில் 51 ரன்களை குவித்து, வங்கதேச அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 376 ரன்கள் எடுத்திருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி விரைவில் வெளியேறினர்.

சேப்பாக்கத்தில் ரிஷப் பண்ட் சதம்: அதிரடியாக தகர்க்கப்பட்ட தோனியின் சாதனை!

இந்திய அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர்.

உணவு இடைவேளைக்கு முன்பாக 6 ஓவரில் 51 ரன்களை குவித்து, வங்கதேச அணியை மிரள வைத்தனர். 

பண்ட் 109 ரன்கள் எடுத்து வெளியேற அதேசமயம் சுப்மன் கில் 119 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

 இந்திய அணி 4 விக்கெட்களுக்கு 287 ரன்கள் எடுத்து, 515 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. 

இதனையடுத்து, வங்கதேச அணிக்கு வெற்றியோ தோல்வியோ என்ற கடினமான சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர