ரோகித், கோலி இல்லாத குறையை சரி செய்யப்போகும் வீரர் யார் தெரியுமா?

Key Points
  • இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சிம்ம சொப்பனமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது.
ரோகித், கோலி இல்லாத குறையை சரி செய்யப்போகும் வீரர் யார் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. 
முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 முதல் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறும். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் இல்லை. அந்த இரு பிளேயர்களின் பொறுப்பை இளம் வீரர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சிம்ம சொப்பனமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது.

இங்கிலாந்துக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 டெஸ்ட் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 712 ரன்கள் எடுத்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிராக 68 பவுண்டரிகள் மற்றும் 26 சிக்ஸர்களையும் அடித்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிகபட்ச ஸ்கோர் 214 நாட் அவுட் ஆகும். 

இங்கிலாந்துக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 712 ரன்கள் எடுத்துள்ளார், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுலுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னிங்ஸைத் தொடங்குவார். 

இயல்பாகவே போட்டியின் முடிவை மாற்றக்கூடிய ஆற்றல் ஜெய்ஷ்வாலிடம் உள்ளதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 பாணியில் சேவாக் விளையாடுவதை போன்ற அதே பாணியை  யஷஸ்வி ஜெய்ஸ்வால் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google