பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு.. ஆனால் இதை செய்ய வேண்டும்... வாசிம் அக்ரம் கொடுத்த ஆலோசனை!

Key Points
  • பாகிஸ்தான் அணி வெற்றிபெற முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு.. ஆனால் இதை செய்ய வேண்டும்... வாசிம் அக்ரம் கொடுத்த ஆலோசனை!

இங்கிலாந்து அணி வீரர்களை ஓய்வறையிலேயே பூட்டி வைத்து டைம் அவுட் முறையில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்று ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை   நியூசிலாந்து அணி 99 சதவீதம் உறுதி செய்துள்ளது. 

இந்த நிலையில், அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேற வேண்டுமென்றால், கற்பனை செய்ய முடியாத வெற்றியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உன் கூடவே இருக்கணும்..  விராட் கோலியை தேடி ஹோட்டலுக்கே சென்ற அனுஷ்கா!

பாகிஸ்தான் அணி தகுதிபெற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும், அதேபோல் 400 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்த வேண்டும்.

ஒருவேளை 450 ரன்கள் சேர்த்தால் 162 ரன்களுக்குள்ளும் 500 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 211 ரன்களுக்குள்ளும் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற 99 சதவீதம் வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், “உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் செய்து நல்ல இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். அதன்பின் இங்கிலாந்து அணியை ஓய்வறையில் வைத்து பூட்டி வைத்து, டைம் அவுட் செய்ய வேண்டும்” என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

அதாவது மக்களே, இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் பங்களாதேஷ் அணியால் ஆட்டமிழப்பு செய்யப்பட்டதை பின்பற்றி இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்று வாசிம் அக்ரம் கூறிய இருக்கார். புரிந்ததா?.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google