கலிபோர்னியாவில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கலிபோர்னியாவில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டொக்டன் மேயர், இந்த மண்டபத்தில் ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்று வந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளார் என்றும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதல் யாரேனும் ஒரு குறிப்பிட்ட நபரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு மேயர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.