உலகக் கோப்பை கால்பந்து: சவுதி அரேபியா - உருகுவே மோதலில் பரபரப்பான டிரா
- உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் ‘எச்’ பிரிவில் சவுதி அரேபியாவுக்கும் உருகுவேவுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவாக முடிந்தது.
- அப்துல்லேலா அல்-அம்ரி முதல் பாதியிலும், மாக்ஸி அரௌஜோ இரண்டாம் பாதியிலும் கோல் அடித்தனர்.
- இந்த முடிவுடன் பிரிவில் உள்ள அனைத்து அணிகளும் ஒரு புள்ளி வீதம் பெற்றுள்ளன.
23வது உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் ‘எச்’ பிரிவில் இன்று மியாமியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவும் உருகுவேயும் மோதின. போட்டியின் தொடக்கம்முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கோல் அடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
முதல் பாதி கோல் இன்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41ஆவது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் அப்துல்லேலா அல்-அம்ரி ஒரு கோலைப் பதிவுசெய்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.
பின்னடைவைச் சந்தித்த உருகுவே அணி இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அந்த அணிக்கு 80ஆவது நிமிடத்தில் சமநிலை கிடைத்தது. மாக்ஸி அரௌஜோ அடித்த கோலின் மூலம் உருகுவே 1-1 எனச் சமன் செய்தது.
இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக் கோலைத் தேடித் தீவிரமாக முயற்சித்தன. ஆனால் கூடுதல் கோல் எதுவும் அடிக்க முடியாததால், ஆட்ட நேர முடிவில் சவுதி அரேபியா - உருகுவே ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவாக முடிந்தது.
இந்த டிரா காரணமாக ‘எச்’ பிரிவில் உள்ள அணிகள் அனைத்தும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இதனால் நாக்-அவுட் சுற்றுக்கான போட்டி மேலும் விறுவிறுப்பாகியுள்ளது.


