திரிகிரக யோகத்தில் நட்சத்திர மாற்றம் – கோடிகளைக் குவிக்கப்போகும் 4 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் கர்மம் மற்றும் நீதியின் அதிபதியாகப் போற்றப்படும் சனிபகவான், உத்தரட்டாதி நட்சத்திரத்திலிருந்து வெளியேறி, கடந்த மே 17 அன்று பிற்பகல் 3:39 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ளார். வரும் அக்டோபர் 9 வரை அவர் இந்த நட்சத்திரத்திலேயே தொடர்ந்து சஞ்சரிக்கவுள்ளார். ரேவதியின் அதிபதி கிரகங்களின் இளவரசரான புதன் என்பதாலும், சனிபகவானுக்கு புதன் நட்புக் கிரகமாகக் கருதப்படுவதாலும், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பெயர்ச்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், அது `திரிகிரக யோகம்' எனும் அரிய கிரக அமைவின்போது நிகழ்ந்துள்ளது. தற்போது சூரியன், புதன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் ரிஷப ராசியில் ஒன்றாக இணைந்துள்ளதால், சனியின் இந்த நட்சத்திர மாற்றம் பல ராசிகளுக்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாதகமான கிரக நிலையால் நான்கு ராசிக்காரர்கள் கோடிகளைக் குவிக்கும் யோகத்தைப் பெறவுள்ளனர்.
ரிஷப ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றம் நேர்மறையான பலன்களை அள்ளித் தரும். அவர்களின் ஆளுமை மேம்படுவதோடு, வேலை, வணிகம் சார்ந்த சரியான முடிவுகளை எடுக்கும் திறன் கூர்மையடையும். வியாபாரத்தில் எதிர்பாராத நன்மைகளும், புதிய முதலீடுகளில் அதிக லாபமும் கிட்டும். பணியிடத்தில் திறமை பாராட்டப்பட்டு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட, தொழில் வாழ்க்கையில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
துலாம் ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு பெருகுவதால், பல துறைகளில் வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான நீண்ட தூரப் பயணங்கள் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்டுவதுடன், வியாபார விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். துணையுடனான நீண்ட நாள் வாக்குவாதங்கள் முடிவுக்கு வந்து, குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.
மகர ராசியினரைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக அனுபவித்து வந்த சிரமங்கள் படிப்படியாக விலகும். பொருளாதார நிலை மேம்பட்டு, புதிய திட்டங்களை முன்னெடுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் தேடி வரும். பெற்றோர் ஆசீர்வாதத்தால் சாதனைகள் படைக்க முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்; திருமணமாகாதோருக்கு உகந்த வாழ்க்கைத் துணை அமையும். நீண்ட நாள் கனவான வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டு. உடல்நலம் உறுதியாக இருக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நிதி நிலையில் படிப்படியான முன்னேற்றத்தை வழங்கும். செல்வம், சொத்து, வருமான ஆதாயங்கள் பெருகும். குடும்ப உறவுகள் வலுவடைந்து வீட்டில் நல்லிணக்கம் அதிகரிக்கும். அனைத்து அதிர்ஷ்டங்களும் கிட்டும் இக்காலத்தில், குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். சனியின் அருளால் பணியிடச் சூழல் சுமுகமாக மாறி பதவி உயர்வுக்கு வழிவகுக்கும். புதிய வணிக முயற்சிகள் குறிப்பிடத்தக்க லாபத்தை அளிக்கும். செல்வத்தைத் திறம்பட சேர்த்து சேமிப்பதற்கு இது உகந்த காலமாக அமையும்.
