மீண்டும் அப்பாவாகப் போகும் ரோஹித்... முதல் டெஸ்டில் விலக இதுதான் காரணம்... ரகசியத்தை கசியவிட்ட வீரர்!

முதல் டெஸ்ட் போட்டியில், நான் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான் என பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா, வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
மீண்டும் அப்பாவாகப் போகும் ரோஹித்... முதல் டெஸ்டில் விலக இதுதான் காரணம்... ரகசியத்தை கசியவிட்ட வீரர்!

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளதுடன், முதல் போட்டி, நவம்பர் 22ஆம் தேதி, பெர்த்தில் துவங்க உள்ளது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில், நான் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான் என பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா, வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். 

இருப்பினும், என்ன காரணம் என்பது குறித்து ரோஹித் சர்மா தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, ‘‘ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார். அவர், இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக போவதால், முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாத நிலை இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், அவர் விலக வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.

கடந்த முறை, இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றபோது, விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்ததால், கோலி முதல் டெஸ்ட் முடிந்த உடனே நாடு திரும்பினார். அத்தொடரில், இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

தற்போது, ரோஹித் சர்மாவும் அதேபோல் ஒரு காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விலக உள்ளார். இரண்டாவது போட்டியில், பங்கேற்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் டிசெம்பர் 6ஆம் தேதி அடிலெய்டில் துவங்கும். 
மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனிலும், 4ஆவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 26ஆம் தேதி, மெல்போர்னிலும், கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 5ஆம் தேதி, சிட்னியிலும் துவங்க உள்ளது.

இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்றால்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர