ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை சிக்கல்: தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பில் பரிசீலனை

Key Points
  • ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதியான முடிவை எ...
  • பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எந்த உடன்பாட்டும் இல்லாமல் முடிவடைந்தது.
ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை சிக்கல்: தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பில் பரிசீலனை

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை. பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எந்த உடன்பாட்டும் இல்லாமல் முடிவடைந்தது.

அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான விவகாரங்களில் இரு தரப்பும் ஒருமித்த கருத்தை எட்டாதது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் எச்சரிக்கையை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை தொடர்பான கட்டுப்பாடு விவகாரம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத் நகரில் நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன், அமெரிக்கா சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட வேண்டும் என்பதுடன், ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்போது அமலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கும் வாய்ப்பை இரு நாடுகளும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தையை அமைதியாக முடிக்க கூடுதல் நேரம் தேவைப்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google