பஞ்சாப் சாதனை வெற்றி... மும்பை அணி தோற்றது எப்படி? ஆப்பு வைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.

பஞ்சாப் சாதனை வெற்றி... மும்பை அணி தோற்றது எப்படி? ஆப்பு வைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.

மும்பை அணி தொடர் வெற்றிகள் பெற்றதால் பலரும் மும்பை தான் இம்முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் எங்கிருந்தோ வந்து ஆப்பு வைத்துவிட்டு சென்றுவிட்டார். 

மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் முதலில் பேட்டிங் செய்தும் தோற்றது இதுதான் முதல் முறை. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா எப்போதெல்லாம் சிறப்பாக செயல்படுகிறாரோ, அப்போதெல்லாம் மும்பை அணி வெற்றி பெறும். குஜராத்துக்கு எதிரான போட்டியில் கூட பும்ராவின் ஓவர்தான் ஆட்டத்தையே மாற்றியது.

ஆனால், இந்தப் போட்டியில் நான்கு ஓவருக்கு 40 ரன்கள்  பும்ரா விட்டுக் கொடுத்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம். பவர் பிளேவில் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஜோஸ் இங்கிலீஷ் 20 ரன்களை குவித்தார். 

இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை பும்ரா ஓவரில் ஜோஸ் இங்கிலீஷ் அடிக்க அது ஒட்டுமொத்த மும்பை அணியின் உத்வேகத்தையும் தொலைத்தது. இதனால் பும்ராவை தொடர்ந்து இரண்டு ஓவர்கள் ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்த முடியாமல் ஹர்திக் பாண்டியா தடுமாறினார். 

பும்ராவின் முதல் ஓவரில் ரன்கள் சென்றதால் அடுத்த மூன்று ஓவர்கள் வீசும் போதும் அவரது பவுலிங்கை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பஞ்சாப் அணி விளையாடியது.

ரீஸ் டோப்ளி என்ற இங்கிலாந்து வீரரை மும்பை அணி களம் இறக்கிய நிலையில், அவருடைய ஓவரில் ஸ்ரேயாஸ் ஹார்ட்ரிக் சிக்ஸர்களை அடித்தார். மூன்று ஓவர்கள் வீசிய ரீஸ் டோப்லி 40 ரன்கள் குவித்தார். 

அஸ்வினி குமார் இறுதிக்கட்டத்தில் பந்து வீசும் சூழலுக்கு தள்ளப்பட்டதுடன், அந்த இடத்தில் பவுல்ட் அல்லது பும்ரா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் பந்து வீசியிருக்க வேண்டும்.

இதனால், அவர் நான்கு ஓவரில் 55 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மிட்செல் சாண்ட்னர் மேஜிக்கும் எடுபடாத நிலையில், மும்பை அணி பந்துவீச்சு 200 ரன்களை குவித்தும் முதல்முறையாக தோல்வியை தழுவியது.