முகமது ஷமி இதை செய்தால் ஆஸி புறப்படுவார்: பிசிசிஐ தகவல்!

Key Points
  • நவம்பர் 22ஆம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமியை சேர்க்கவில்லை.
முகமது ஷமி இதை செய்தால் ஆஸி புறப்படுவார்: பிசிசிஐ தகவல்!

34 வயதாகும் முகமது ஷமி, கடந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில், 24 விக்கெட்களை கைப்பற்றி, அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக திகழ்ந்த நிலையில், அடுத்து காலில் ஏற்பட்ட வலிக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகு, கிட்டதட்ட ஒரு வருடம் வரை, கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா தோற்றப் பிறகு, முகமது ஷமி, முழு ரன் அப்பில் ஓடி பந்துவீசிய வீடியோ வெளியிடப்பட்டது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஷமி சேர்க்கப்படுவார் எனக் கருதப்பட்டது. 

ஆனால், நியூசிலாந்த தொடரில் ஷமியை சேர்க்கவில்லை. அடுத்து, நவம்பர் 22ஆம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமியை சேர்க்கவில்லை.

முகமது ஷமி இல்லாத காரணத்தினால், இந்திய அணியில் அனுபவமில்லாத ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா போன்ற பௌலர்களில் ஒருவர் விளையாட வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், ஹர்ஷித் ராணா அபாரமாக செயல்பட்டு அசத்தினார். இந்தியாவும் முதல் டெஸ்ட் போட்டியில், மெகா வெற்றியைப் பெற்றது.

மறுபக்கம், முகமது ஷமியும் எப்படியாவது ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றாக வேண்டும் என்ற நோக்கில், ரஞ்சிக் கோப்பையில் மேற்கு வங்க அணிக்காக விளையாடி, ஒரு போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றினார். அடுத்து, சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் விளையாடி வருகிறார். ஆனால், ஒரு போட்டியில் 2 ஓவர்கள் வரை, மட்டுமே பந்துவீச வாய்ப்பு கிடைக்கிறது.

இந்நிலையில், முகமது ஷமி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட என்ன வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து, பிசிசிஐ மருத்துவக்குழுவினர் பதில் அளித்துள்ளனர். அதில், ‘‘முகமது ஷமி, நீண்ட காலமாக ஓய்வில் இருந்தால், அவரது பிட்னஸில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சற்று, உடல் எடை அதிகரித்திருக்கிறது. 

அடுத்த ஒரு வாரம், முகமது ஷமியை தொடர்ந்து கண்காணிப்போம். மீண்டும், பழைய மாதிரி உடல் எடையை குறைத்து, பிட்னஸுடன் இருந்தால் மட்டுமே அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முடியும். ஒருவேளை, ஒரு வாரத்தில் அவர் பிட்னஸை நிரூபிக்கவில்லை என்றால், அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பே இல்லை’’ எனவும் கூறினர்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 6ஆம் தேதி, அடிலெய்டில் பகலிரவு டெஸ்டாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google