போருக்கு மத்தியில் அமெரிக்காவின் முக்கிய புள்ளி ராஜினாமா
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானுக்கு எதிரான போரை தன்னால் மனசாட்சியுடன் ஆதரிக்க முடியாது என்பதனால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஜோ கென்ட், இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தின் காரணமாக தொடங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையும் படியுங்கள்:
ஈரான் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி உயிரிழப்பு? இஸ்ரேல் தகவல்
மத்திய கிழக்கில் நடைபெறும் இத்தகைய மோதல்கள் அமெரிக்காவின் செல்வத்தையும் உயிர்களையும் வீணடிப்பதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தேவையற்ற போர்களில் உயிரிழப்பதை ஜோ கென்ட் கடுமையாக எதிர்க்கிறார் என்றும் அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
