ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? தோனி தான் காரணமா? மனந்திறந்த சுரேஷ் ரெய்னா!

Key Points
  • 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை.
ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? தோனி தான் காரணமா? மனந்திறந்த சுரேஷ் ரெய்னா!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவானான சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டி வரை அதிக முறை தகுதி பெற சுரேஷ் ரெய்னா முக்கிய காரணம்.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை. அத்துடன், ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இதன் காரணமாக சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தோனியுடன் பிரச்சினை என்பது  குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ் ரெய்னா, எனக்கும் தோனிக்கும் பிரச்சினையா என்பதை நீங்கள் தோனியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.

அத்துடன், தான் ஓய்வு பெற்றதற்கு அது காரணம் கிடையாது என்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனக்கு மற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஊக்கம் கிடைக்காத நிலையில், எந்த ஒரு உத்வேகமும் இன்றி இருந்தாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கியவாறுதான் படித்ததுடன், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதால், சிறுவயதில் இருந்து குடும்பத்துடன் நான் நேரம் செலவிட்டதே கிடையாது என்றும் தெரிவித்து உள்ளார்.

எனவே, தற்போது தன்னுடைய குறிக்கோள் எல்லாம் தனது குடும்பத்தையும் பெற்றோர்களையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்காகவே  ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google