கில், ஜெய்ஸ்வால் அதிரடி சதம்... ரிஷப் பண்ட் அரைசதம்.. முதல் நாளில் இந்திய அணி ரன் குவிப்பு!

விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், முகமது சமி இல்லாத நிலையில் இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளது.

கில், ஜெய்ஸ்வால் அதிரடி சதம்... ரிஷப் பண்ட் அரைசதம்.. முதல் நாளில் இந்திய அணி ரன் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களான சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமாக சதம் விளாசியதுடன், துணை கேப்டன் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து களத்தில் உள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், முகமது சமி இல்லாத நிலையில் இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளது.

வழமையாக லீட்ஸ் மைதானத்தின் முதல் நாள் முதல் செஷனில் எப்போதுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அங்கு கடைசியாக நடைபெற்ற ஆறு டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்துவீசி அணியே வெற்றி பெற்றது. 

சதமடித்த சுப்மன் கில்... கோலி, கவாஸ்கரை தொடர்ந்து அபாரம்.. பல்வேறு சாதனைகள் படைப்பு!

இதனால், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில், களமிறங்கிய ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தது. இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை தட்டினர்.

ராகுல் 42 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அறிமுக போட்டியில் விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தார். ஜெய்ஸ்வால், கில் ஜோடி பார்ட்னர்ஷிப் சேர்ந்து அபாரமாக ரன்களை குவித்தனர்.

இதனையடுத்து, ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் லீட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

அது மட்டும் இல்லாமல் 23 வயதுக்குள் அதிக சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்ததுடன், ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், கில் அதிரடியாக விளையாடினார்.

140 பந்துகளில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது சதத்தை பூர்த்தி செய்ததுடன், கேப்டனாக களமிறங்கிய முதல் இன்னிங்ஸ் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ரிஷப் பண்ட் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்திய நிலையில்,  முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழ்ப்பிற்கு 351 ரன்கள் எடுத்திருக்கிறது. கில் 127 ரன்களுடனும், பண்ட் 57 ரன்களுடனும் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.