கம்பீர் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... கங்குலி சொன்ன வார்த்தை.. பிசிசிஐயில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

Key Points
  • இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவு சாதிக்கவ...
கம்பீர் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... கங்குலி சொன்ன வார்த்தை.. பிசிசிஐயில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவு சாதிக்கவில்லை. 

சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரையும் இந்திய அணி இழந்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனது.

எனினும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றிய றிலையில் தற்போது கம்பீருக்கு மிகப்பெரிய பொறுப்பாக இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது. 

இந்த நிலையில்,  ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள், கம்பீரின் ஆதிக்கத்தால் தான்  அணியை விட்டு வெளியேறியதாக பிசிசிஐயில் பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான கங்குலி ஒரு கருத்தை வெளியிட்டு  உள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நீங்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, கங்குலி, நான் ஏற்கெனவே இந்திய கிரிக்கெட்டில் பல பொறுப்புகளில் இருந்திருப்பதால் இதைப் பற்றி தற்போது யோசிக்கவில்லை. 

எனினும், 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நான் களத்தில் எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. அதன் பிறகு பிசிசிஐயின் தலைவர் பொறுப்பை வகித்து பல விடயங்களை செய்திருக்கிறேன்.

எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு 53 வயது தான் ஆகிறது. எனவே அடுத்தது என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை செய்ய நான் தயாராக தான் இருக்கின்றேன்” என்று கூறினார். 

இதேவேளை, கம்பீர் குறித்து பேசிய கங்குலி, பயிற்சியாளராக தன்னுடைய பணியை கம்பீர் நன்றாக செய்கின்றார். ஆரம்பத்தில் கொஞ்சம் தோல்விகளை சந்தித்தாலும் அதன் பிறகு அணியின் சிறப்பாக வழி நடத்தி சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார்.

இங்கிலாந்து தொடர் அவருக்கு மிகப்பெரிய ஒரு தொடராக இருக்கும். அவரை ஒரு வீரராக நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் பயிற்சியாளராக அருகில் பார்த்ததில்லை. இதனால் அவர் எப்படி செயல்படுகிறார் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கங்குலி கூறியுள்ளார். 

பயிற்சியாளர் பதவிக்கு வர தயார் கங்குலி வெளிப்படையாக கூறிவிட்டதால் இது கம்பீருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google