ரோகித்துக்கு மற்றும் சச்சின் மகனுக்கு ஆப்பு வைத்த ஹர்திக் பாண்டியா! என்னாச்சு தெரியுமா?

Key Points
  • மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு தராதது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
ரோகித்துக்கு மற்றும் சச்சின் மகனுக்கு ஆப்பு வைத்த ஹர்திக் பாண்டியா! என்னாச்சு தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு தராதது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி வருகிறார். 
மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சீசனில் பல போட்டிகளில் விளையாடி அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

இப்படி இருந்தாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அவருக்கு ஒரு முறை கூட ஹர்திக் பாண்டியா வாய்ப்பு வழங்கவில்லை. 

ஹர்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ரோஹித்? வெளியான தகவல்!

படிப்படியாக ஆல் ரவுண்டராக உயர்ந்த ஹர்திக் பாண்டியா, சச்சின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஜுன் டெண்டுல்டருக்கு வாய்ப்பு வழங்க முன் வரவில்லை என்று விமர்சிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் தீர் மற்றும் அன்சூல் காம்போஜ் போன்ற வீரர்களுக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு வழங்கியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்த செயலுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளதுடன்,  அர்ஜுனனின் திறமையை பார்த்தாவது அணியில் ஒரு போட்டியில் வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

முன்னதாக, அணியின் கேப்டன் பொறுப்பை கைப்பற்றி ரோஹித்துக்கு ஆப்பு வைத்த ஹர்திக் பாண்டியா, இப்போது சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆப்பு வைப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google