உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை: பிரேசிலை முந்தி அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி
- ஜெர்மனி அணி, கியூராசாவை 7-1 என வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மொத்தம் 239 கோல்களைப் பதிவுசெய்து, பிரேசிலின் 238 கோல்கள் என்ற சாதனையை ...
- இந்த சாதனையுடன் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை ஒன்று பதிவாகியுள்ளது. 23வது உலகக் கோப்பைத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி அணி, கியூராசாவை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக்கம்முதலே முழு ஆதிக்கத்தைச் செலுத்திய ஜெர்மனி, எதிரணிக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் கோல் மழை பொழிந்தது.
இந்தப் போட்டியில் அடித்த ஏழு கோல்களையும் சேர்த்து, உலகக் கோப்பைப் போட்டிகளில் ஜெர்மனியின் மொத்த கோல் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தது. இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை ஜெர்மனி படைத்துள்ளது. இதற்குமுன், 238 கோல்களுடன் பிரேசில் முதலிடத்தில் இருந்தது. தற்போது 239 கோல்களை எட்டிய ஜெர்மனி, பிரேசிலின் சாதனையை முறியடித்துப் புதிய உச்சத்திற்குச் சென்றுள்ளது.
உலகக் கோப்பை மேடையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜெர்மனி, இந்தத் தொடரிலும் கோல் வேட்டையைத் தொடர்கிறது. இந்தச் சாதனைக்குப் பிறகு, மேலும் பல சாதனைகளை ஜெர்மனி படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


